Home இலங்கை தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் விசாரணை

தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு அருகில் உள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மயானத்தின் காவலாளி கிராம சேவையாளருக்கு அறிவித்தார்.

அதனை அடுத்து கிராம சேவையாளர் அது தொடர்பில் தெல்லிப்பளை காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான இடத்தினை ஆராய்ந்த போது சடலம் ஒன்று புதைக்கபட்டு இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியினை அகழ்வதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் அனுமதி கோரினார்கள்.

அதற்கு அனுமதி அளித்த நீதிவான் முன்னிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தேகத்திற்கு இடமான பகுதி அகழப்பட்டது. அதன் போது அங்கு மாடோன்றின் சடலம் மீட்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More