Home இந்தியா சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் தாள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் தாள்கள் பறிமுதல்

by admin


சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் தாள்களை பறிமுதல் செய்த இந்திய  மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

வெளி மாநிலங்களுக்கு புதிய ரூபாய் தாள்கள்; கடத்தப்படுவதாக மத்திய வருபாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து  சென்னை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது  குறித்தபணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில்   5 பேரை கைது செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  புதிய ரூபாய் தாள்கள் கோடிக்கணக்கில் பிடிபடும் நிலையில், தற்போது விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள பணம் யாருடையது என்பது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More