Home இலங்கை பிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு

பிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு

by admin


லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணமாக அறிவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

லண்டன்- வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் இவ்வாறு இன்றையதினம் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் கடந்தாண்டு நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  #பிரியங்கபெர்னாண்டோ  #தண்டப்பணம்  #கொலைமிரட்டல்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More