Home இலங்கை விலாசத்தை மாற்றிக் கூறி வைத்தியசாலையில் சிசுவைப் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா…

விலாசத்தை மாற்றிக் கூறி வைத்தியசாலையில் சிசுவைப் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா…

by admin

கொழும்பை அண்மித்த பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்த, கொரோனா தொற்றுடைய கர்ப்பிணிப் பெண் இன்று (04.04.20) அதிகாலை நாகொட வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்ததன் பின்னர், கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிசுவின் இரத்த மாதிரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு பிரசவ வைத்தியம் பார்த்த நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்ட அறுவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More