Home இலங்கை சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது.

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது.

by admin

அச்சுவேலி காவல்துறைபிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பு காவல்துறை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கில் உள்ள வீடொன்றின் வளவுக்குள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் அளவுடைய 100 மதுபானப் போத்தல்கள் நேற்று  அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை மறைத்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வீட்டில் வசிப்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த வீட்டுக்கு சில மைல்கள் தூரத்தில் நேற்று முற்பகல்  மற்றொரு வீட்டின் வளாகத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் அளவுடைய 100 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் வசிப்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் சேனாதீரவால் சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. #சட்டவிரோத  #மதுபான  #கைது #அச்சுவேலி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More