Home இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

by admin

இலங்கையில் நடைப்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மூவரடங்கிய ஆணைக்குழுவொன்றினை நியமித்துள்ளாா்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை குறித்த குழு வழங்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஆணைக்குழு ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் செயற்படவுள்ளதுடன் ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஆணைக்குழு #நியமனம் #மனிதஉரிமை_மீறல்கள் #வர்த்தமானி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More