இலங்கை பிரதான செய்திகள்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

இலங்கையில் நடைப்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மூவரடங்கிய ஆணைக்குழுவொன்றினை நியமித்துள்ளாா்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை குறித்த குழு வழங்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை மாஅதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஆணைக்குழு ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் செயற்படவுள்ளதுடன் ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஆணைக்குழு #நியமனம் #மனிதஉரிமை_மீறல்கள் #வர்த்தமானி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.