Home பிரதான செய்திகள்தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

by admin

தென்னாபிரிக்காவின் கப்டவுனில் நடைபெற்ற இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3-வதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா 223 ஓட்டங்களும், தென்னாபிரிக்கா 210 ஓட்டங்களும் எடுத்திருந்தன.. இதனையடுத்து 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 198 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.


இதையடுத்து 212 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்கா அணி 4ம் நாள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்யது. 

இதன்மூலம் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடர் நாயகன் எனும் இரண்டு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் தட்டிச் சென்றுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More