மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இன்மையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் இன்மையால் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதேநேரம் போக்குவரத்து சேவைகளும் முடக்கமடைந்துள்ளது. அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளும் பெற்றோல் இன்மையால் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்