Home இலங்கைகோண்டாவிலில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்றவர் கைது!

கோண்டாவிலில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்றவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19.02.23) கோப்பாய் குற்றத்தடுப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சந்தேகநபரை மடக்கி சோதனை செய்த போது , 750 கிராம் போதை கலந்த பாக்கு உடைமையில் இருந்து மீட்கப்பட்டது.

அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்த காவற்துறையினர் , காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More