Home இலங்கைமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிப்பு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிப்பு

by admin

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில்  நேற்றிரவு   குடியிருப்பொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்  7 பேர்  காயமடைந்த நிலையில்   கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன்  மண்சரிவில் சிக்குண்டவர்களை பிரதேச மக்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து   மீட்டுள்ளதுடன் .  எவருக்கும்  உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More