Home இலங்கை யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!

by admin

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்று முன் தினம் திங்கட்கிழமை சென்று , சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால், கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டதில், 07 மாணவர்களும் , கடலட்டை பண்ணை உரிமையாளர் ஒருவரும், பண்ணை பணியாளர் ஒருவருமாக 09 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More