Home இலங்கை 14 வருடங்களுக்குப் பின்னர் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை-  

14 வருடங்களுக்குப் பின்னர் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை-  

by admin

 

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன்,ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடா்பில்  கைது செய்யப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளின் இடம் பெற்று வந்த நிலையில்  குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர்   இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளி க்கப்பட்டுள்ளது.

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02-ஒக்டோபர்-2009  (02/10/2009)  அன்று   குறித்த சம்பவம்   தொடா்பான  வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.

முருங்கன் காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக  இன்றைய தினம்  (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில்   எடுத்துக் கொள்ளப்பட்ட போது
இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கும் போது மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது. எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய தினம் குற்றவாளியை போகம்பரை சிறைச்சாலை க்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More