Home இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு!

by admin

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03.08.24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான திலங்க சுமதிபால மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

“புதிய குழுவொன்றுக்கு நாட்டைக் கையளிக்க வேண்டுமானால், ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பில் அதற்கான பலமான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது அடையாளத்தை வைத்துக்கொண்டு தனி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
இந்த நேரத்தில் தாம்  சரியான முடிவை எடுத்துள்ளதாக  அன்பான கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துக் கொள்வதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More