Home இலங்கை புதிய அரசியலமைப்பு – தமிழ்த் தேசியக் கட்சிகள் சந்திப்பு

புதிய அரசியலமைப்பு – தமிழ்த் தேசியக் கட்சிகள் சந்திப்பு

by admin

 

புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டினை  மேற்கொள்வதற்கான சந்திப்பொன்று  எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.

நேற்று (07) செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்,  நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்  நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில்  இடம்பெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More