284
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, சரணடைவதற்காக நீதிமன்றம் சென்றுள்ளாா்
நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலியான முறைப்பாடு செய்தமை தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
இது தொடா்பான வழக்கு நேற்று (13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதனையடுத்து , கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love

