இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் அமைந்துள்ள பர்னி தெலோங் (Bur Ni Telong) எரிமலை தற்போது அதிகப்படியான சீற்றத்துடன் காணப்படுவதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சுமாத்ராவின் பெனர் மெரியா (Bener Meriah) பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை, கடந்த சில நாட்களாக அதிகப்படியான புகையையும் சாம்பலையும் வெளியேற்றி வருவதால் “ஒரஞ்சு” (Orange Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை இந்தோனேசிய அரசு அவசரமாக அப்புறப்படுத்தி வருகிறது. அவர்கள் பாதுகாப்பான தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
எரிமலையிலிருந்து எந்நேரமும் லாவா குழம்புகள் மற்றும் நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடும் என்பதால், பொதுமக்கள் மலைப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிமலைச் சாம்பல் காற்றில் பரவுவதால், அப்பகுதியிலான சில உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பர்னி தெலோங் ஒரு அடுக்கு எரிமலை (Stratovolcano) வகையைச் சேர்ந்தது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடைசியாக 1924-ல் இது பெரிய அளவில் வெடித்தது. தற்போது மீண்டும் அதன் செயல்பாடுகள் அதிகரித்திருப்பது புவியியலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Tag Words: #BurNiTelong #IndonesiaVolcano #Sumatra #VolcanoEruption #EmergencyEvacuation #BenerMeriah #NaturalDisaster #GlobalNews #TamilNews #SafetyFirst

