கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலமான இரணைமடு நீர்த்தேக்கம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து, இன்று (ஜனவரி 7, 2026) மேலதிக நீரை வெளியேற்ற மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், பாதுகாப்பைக் கருதி பொறியாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மொத்தம் உள்ள மதகுகளில் 6 மதகுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அதில் 2 மதகுகள் தலா 6 அங்குலம் வரையும் ஏனைய 4 மதகுகள் தலா 1 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் விநாடிக்கு அதிகப்படியான நீர் நீர்த்தேக்கத்தை வந்தடைவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால், இரணைமடு குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மற்றும் கனகராயன் ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் (குறிப்பாக முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் பரந்தன் பகுதிகள்) வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆற்று நீரைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tag Words: #IranaimaduTank #Kilinochchi #SriLankaRain #FloodAlert #NorthernProvince #IrrigationSL #WaterLevel #BreakingNewsTamil #VanniNews

