200
சமீபத்தில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்கள் குறித்து CNN செய்தியாளர் கெய்ட்லான் காலின்ஸ் (Kaitlan Collins) கேள்வி எழுப்பினார். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காதது குறித்து அவர் கேட்டபோது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கோபமடைந்தார்.
செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த டிரம்ப், அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்:
“நீங்கள்தான் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான செய்தியாளர்.” “உங்களை எனக்கு 10 ஆண்டுகளாகத் தெரியும். உங்கள் முகத்தில் ஒருமுறை கூட புன்னகையை (Smile) நான் பார்த்ததில்லை.” “CNN நிறுவனம் உங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளரை “வெட்கப்பட வேண்டும்” என்று கூறிய டிரம்ப், தன் மீதுள்ள 34 குற்றவியல் வழக்குகளில் (Felony counts) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும், எவ்வித வருத்தமும் இன்றி செயல்படுவது சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எப்ஸ்டீன் ஆவணங்களில் தன் பெயர் வரவில்லை என்றும், அது தன் மீது நடத்தப்பட்ட சதி என்றும் அவர் வாதிடுகிறார்.
அதே சமயம், பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்காகத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய கெய்ட்லான் காலின்ஸின் துணிச்சலை ஊடகவியலாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
________________________________________
Spread the love

