196
மேலும், இந்தியத் தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் அதிகப் போட்டியிடும் திறனைப் பெறும். குறிப்பாக ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு இது பெரும் பலனைக் கொடுக்கும் இந்திய விவசாயிகளுக்கும், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கும் அமெரிக்கச் சந்தையில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சிறு, குறுந்தர மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Global Supply Chain) தங்களை இணைத்துக் கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பு. GPU-கள், தரவு மையங்கள் (Data Centers) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரஸ்பர இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Interim Trade Agreement) கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் இறக்குமதி வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.!
அடுத்த 5 ஆண்டுகளில் எரிசக்தி, விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அவர்களின் தனிப்பட்ட அக்கறைக்கும், இந்திய-அமெரிக்க உறவின் ஆழமான நம்பிக்கைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
‘வளர்ந்த பாரதம்’ (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி முன்னேறும் பயணத்தில், இத்தகைய சர்வதேசக் கூட்டாண்மைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்! 
Spread the love

