Home இலங்கைவடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

by admin

வடக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கென (Management Service Officers) புதிய மற்றும் தனித்துவமான இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்திய கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இச்சந்திப்பு, மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் பல முக்கியமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தற்போது முகாமைத்துவ அலுவலர்களுக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே நடைமுறையில் உள்ளது. இனிவருங்காலங்களில் அதிசிறப்பு தர (Super Class) முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கெனப் பிரத்தியேகமான கொள்கை ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு உத்தியோகத்தருக்குமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் இனி தெளிவாக வரையறுக்கப்படும். சில திணைக்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் தமது விடுமுறை கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிக்க அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Tag Words:
#NorthernProvince #GovernorVedanayagan #AdminOfficers #NewPolicy #JaffnaNews #GovernanceSL #LKA #AdministrativeReform

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More