இலங்கை அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்று (பெப்ரவரி 17, 2026) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்த விவகாரத்தில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த சட்டமூலம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 02 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 152 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலே ஓய்வூதியம் பெறும் உரிமை இருந்தது. இனிவரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகைய ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டும், மக்கள் பிரதிநிதிகள் ஒரு ‘சேவையாளராக’ இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த ஒரு விடயம் சட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tag Words:
#SriLankaParliament #MPPensions #AbolishPensions #LKPoli #HistoricVote #ReformSL #BreakingNewsSL #LKA

