Home இலங்கைகபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்யுமாறு பிடியாணை

கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்யுமாறு பிடியாணை

by admin

  

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் வசந்த எஸ். போதராகம இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்   ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு  கடந்த மே 05ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

  லஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவில் (Motion)  பிணை வழங்கப்பட்டபோது தலா ரூ. 10 மில்லியன் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் கோரப்பட்டிருந்தன.  கபில சந்திரசேனவைச் தனிப்பட்ட ரீதியில் அறியாத இருவர், தலா ரூ. 15,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் பிணை நிற்க முன்வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நிரந்தர வேலை அல்லது வருமானமற்ற நபர்களைப் பணம் கொடுத்து பிணை நிற்க வைத்ததன் மூலம், கபில சந்திரசேன நீதிமன்றத்தின் நம்பிக்கையை மீறியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

  விசாரணை அதிகாரிகளின் சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட தலைமை நீதவான், கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, அவரை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய அவரை, விரைவாகக் காவற்துறையினர் கைது செய்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய போலிப் பிணையாளர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மே 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#KapilaChandrasena #SriLankanAirlines #ArrestWarrant #ColomboMagistrateCourt #BriberyCommission #AirbusScandal #USDDollar #BailViolation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More