55
ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபான் நிலையம் (CENTCOM) அறிவித்துள்ளது. ஐந்து மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கை, புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chah Bahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
கரையோர பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், மற்றும் கடல்சார் திறன்களுக்கு எதிராக துல்லிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இயங்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என CENTCOM குறிப்பிட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 13 முதல் ஜூன் 18 வரை நடைமுறையில் இருந்த ஈரானிய கடல்முனை முற்றுகையை ஜூலை 14 மாலை 4 மணி (அமெரிக்க நேரப்படி) முதல் மீண்டும் அமல்படுத்தப் போவதாகவும் அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
இதன் கீழ் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நடைமுறையில் இருந்த முற்றுகையின்போது 140-க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு வழங்கிய கப்பல்கள் திசைதிருப்பப்பட்டதாகவும், 9 ஒத்துழைக்காத கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், 50-க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
Spread the love

