Home இலங்கைஅவுஸ்திரேலியா – சுவிட்ஸலாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இலங்கையை சென்றடைந்துள்ளனர்

அவுஸ்திரேலியா – சுவிட்ஸலாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இலங்கையை சென்றடைந்துள்ளனர்

by admin


சட்டவிரோதமாக, அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்ஸலாந்து ஆகிய நாடுகளில் தங்கியிருந்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இன்று காலை இலங்கையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலமும் 11 பேர் சுவிட்ஸலாந்தில் இருந்து விசேட விமானம் மூலமும் கட்டுநாயக்க விமானநிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 26 பேரில் சிங்களவர்களும் , தமிழர்களும் காணப்படுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More