Home இலங்கை முரசுமோட்டையிலும் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு

முரசுமோட்டையிலும் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

கிராமசேவையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து காவல்துறையினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று 23-05-2018 பிற்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவைகள் அடங்கிய ரவைப்பெட்டிகளை நாற்பதினை மீட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More