குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இருக்கின்றாரா என்பது தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சிறிய சிறிய பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் இயங்கி வரும் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Add Comment