Home இலங்கை முசலி பிரதேச மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது – கே. காதர் மஸ்தான்

முசலி பிரதேச மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது – கே. காதர் மஸ்தான்

by admin

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.  நேற்றையதினம்  பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையிலான குழுவினர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் குறித்த விடயயம் தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தாகவும், அதற்கான தீர்வினை அவர் இன்று வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார் எனவும்  குறித்த விடயம் தொடர்பில்  விரிவாக  ஆராயப்பட்டதுடன் முசலி மீனவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலாவத்துறையில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மட்டும் அங்கு முன்னரைப்போன்று தற்காலிக மீன்பிடி தொழிலில் ஈடுபடவும், காயக்குளி பகுதியில் 1990ம் ஆண்டிற்கு முன்னர் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கொண்டச்சி பகுதி மீனவர்கள் மாத்திரம் மீனவத்தொழிலில் ஈடுபட முடியுமெனவும் அமைச்சரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More