குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பா மீத ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என யூரோபோல் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் மத்திய கிழக்கில் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் இவ்வாறு ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தீவிரவாதிகள் அதிகளவில் ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கலாம் எனவும் கார் குண்டுத் தாக்கதல்கள், கடத்தல்கள், கப்பல் கோரல்கள் போன்ற வழிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மிகவும் ஆபத்தான நிலைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment