இலங்கை பிரதான செய்திகள்

இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்படும் பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர் காலத்தில் போரில் ஈடுபட்டவர்களினாலும் தற்காப்பைத் தேடிய மக்களினாலும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன. அவற்றில் பல இன்று வரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு போன்ற அபாய நோய்கள் ஏற்படுத்தும் வகையில் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது.

நீண்ட மண் அணைகளின் காரணமாக மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாய முயற்சிகள் முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் கிராம மட்டத்திலும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகிய ஆகியவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் மேற்படி கிராமங்களில் காணப்படும் பதுங்கு குழிகளை மூடி உக்காதப் பொருட்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இதனைக் கருத்திற் கொண்டு மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.