Home இலங்கை நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹலோ கோர்ப் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போது நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி குறித்த நபர்களின் ஒன்பது வங்கிகளில் காணப்படும் 15 கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த 100 மில்லியன் ரூபா பணத்தைக் கொண்டு ஹலோ கொர்ப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More