Home இந்தியா சொத்து குவிப்பு வழக்கை நடத்தியதற்காக தமிழகத்திடம் 10 கோடி ரூபா நட்டஈடு கோரிய கர்நாடகா:-

சொத்து குவிப்பு வழக்கை நடத்தியதற்காக தமிழகத்திடம் 10 கோடி ரூபா நட்டஈடு கோரிய கர்நாடகா:-

by admin

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்காக 10 கோடி ரூபா நட்டஈடு தருமாறுஉ தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டுஇந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கை கர்நாடக அரசு ஏற்று நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளுக்காக நட்டஈட்டுத் தொகையை தருமாறு தமிழக தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தது.

எனனும் அதற்கு தமிழக அரசு தரப்பிலிருந்த எந்த வொரு பதிலும் அனுப்பப்படவில்லை எனவும் கடந்த 10 ஆண்டுகளுக்காக தன்னுடைய துறை மட்டும் 5 கோடி ரூபாக்கு மேலாக செலவு செய்துள்ளதாவும் கர்நாடக சட்ட மற்றும் பாராளுமன்ற நலத் துறை மந்திரி ஜெயசந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More