விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை தனிக் கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் தனி அரசியல் கட்சியாக தேசிய சுதந்திர முன்னணியை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மை தனியொரு அரசியல் கட்சியாக அனுமதிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி ஆங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பாராளுமன்றில் அங்கீகரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சுயாதீனமாக பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியும் என்ற போதிலும் தனியான கட்சியாக அங்கீகரிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment