ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பணி நீக்கும் நோக்கில் சூனியம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு சூனியம் செய்யபபட்டுள்ளது.
சூனியம் செய்யப்பட்ட செப்பு தகட்டில் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பதவிய கெபதிகொல்லாவ பிரதேசத்தின் மயானமொன்றிலிருந்து இந்த செப்புத் தகடு மீட்கப்பட்டுள்ளது. உருவங்களையும் பெயர்களையும் எழுதி இவ்வாறு சூனியம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment