Home இந்தியா காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது:-

காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது:-

by admin

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையடுத்து, காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலை கருத்தில் கொண்டு, காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்பாக, மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More