குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே 3 படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கு கடற்பகுதயில் 9.5 கடல் மைல், 06 மற்றும் 07 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் வைத்து நேற்றிரவும் இன்று அதிகாலையிலும் ; இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment