Home இலங்கை இணைப்பு 3 – புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்றார் :

இணைப்பு 3 – புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்றார் :

by admin

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன அவர்கள் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இணைப்பு 2- திலக் மாரப்பன இன்று வெளிவிவகார  அமைச்சராக பதவி ஏற்கின்றார்

Aug 14, 2017 @ 03:02

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விசேட திட்டங்கள் அமைச்சர் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக இன்றைய தினம் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

மத்திய வங்கி பிணை முறிமோசடி குறித்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக கடந்த வியாழக்கிழமை, ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தார்.

இந்தநிலையில் இந்தப் பதவி வெற்றிடத்திற்கு திலக் மாரப்பனவை நியமிக்க பிரதமரும், ஜனாதிபதியும் இணங்கியிருந்தனர். இதன்படி, இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் திலக் மாரப்பன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

இன்றைய தினம் முற்பகல் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வெளிவிவகார அமைச்சுப் பதவியானது தற்காலிக அடிப்படையில் திலக் மாரப்பனவிற்கு வழங்கப்படுவதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் தற்காலிக அடிப்படையில் திலக் மாரப்பன இந்தப் பதவியை வகிப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திலக் மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதில் இணக்கம்?

Aug 11, 2017 @ 03:21

விசேட திட்டங்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கத் தரப்புக்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காரணமாக வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ரவி கருணாநாயக்க, நேற்றைய தினம் தனது பதவி விலகியிருந்தார்.

இந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சட்ட மா அதிபரும், சட்டத்தரணியுமான மாரப்பன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசத்திற்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய மாரப்பன ஆவன்ட் சர்ச்சை காரணமாக பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களான நவின் திஸாநாயக்க, சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும் வெளிவவிகார அமைச்சர் பதவிக்காக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More