எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்த புகையிரதம் எதிரே வந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Add Comment