குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலிலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுதாரியொருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ள அதேவேளை இரண்டு துப்பாக்கிதாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment