Home இலங்கை தீபாவளி தினத்தில் அரசியல் கைதிகளின் நலன்வேண்டியும் விடுதலை வேண்டியும் பிரார்த்தியுங்கள். – பல்கலை மாணவர்கள்

தீபாவளி தினத்தில் அரசியல் கைதிகளின் நலன்வேண்டியும் விடுதலை வேண்டியும் பிரார்த்தியுங்கள். – பல்கலை மாணவர்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தீபாவளி தினத்தினை கறுப்பு தீபாவளியாக அனுஸ்டிக்குமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரி உள்ளனர்.  யாழ்.பல்கலைகழகம் முன்பாக இன்று காலை முதல் மாணவர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதியுடன் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் சந்தித்து அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பேச இருக்கின்ற போதிலும் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிப்படைந்து வருவதனால் , நாம் இன்றைய தினம் அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் , அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

அதேவேளை நாளைய தினம் தீபாவளி தினத்தினை கொண்டாட உள்ள மக்கள் தீபாவளியினை ஆடம்பரமாக கொண்டாடாமல் , கறுப்பு தீபாவளியாக அனுஸ்டியுங்கள். அதேவேளை ஆலய வழிபாடுகளில் ஈபடுபவர்கள் அரசியல் கைதிகளின் நலன் வேண்டியும் , அவர்களின் விடுதலை வேண்டியும் வழிபாடுகளில் ஈடுபடுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More