Home இலங்கை முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு :

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு :

by admin


குளோபல் தமிழ் செய்தியாளர்

முல்லைத்தீவு கடலுக்கு குளிக்கச் சென்றபோது இரண்டு இளைஞர்கள் காணமல் போயிருந்தனர். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் விடுமுறையை கழிப்பதற்காக நணபர்களுடன் நீராடச் சென்ற வேளையிலேயே  குறித்த இளைஞர்கள் இருவரும்    காணாமல்  போயிருந்தனர்.

இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன் ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும்  காணாமல்போன மற்றையவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More