குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காகவே மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மக்கள் வழங்கியுள்ள ஆணையின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அரசாங்கம் நோக்கத்தை விட்டு விலகிச் செல்லாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment