Home இலங்கை ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழுவினரும் கைது

ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழுவினரும் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் தாரா குழுவை சேர்ந்த இருவரை  காவல்துறை  விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய்  காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.

வடமராட்சி அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே கைது செய்யபப்ட்டு கோப்பாய்  காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

யாழ்.இராச பாதை வீதியில் சோதனை இன்று திங்கட்கிழமை, காவல்துறை  விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அதன் போது அந்த வீதி வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியினை மறித்து சோதனை இட்ட போது மிகவும் சூட்சுமமான முறையில் முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வாளினை கைப்பற்றி உள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணைககளை முன்னெடுத்த போது , அவர்களின் கையடக்க தொலைபேசிகளில் விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் ஒளிப்படங்கள் , வாள்களுடன் தாம் நிற்கும் ஒளிப்படங்கள் உள்ளிட்ட படங்களை பதிவு செய்து வைத்து உள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் வடமராட்சியை தளமாக கொண்டு இயங்கும் தாரா குழு எனும் குழுவை சேர்ந்தவர்கள் என  காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More