Home இலங்கை மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு

மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு

by admin

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை  வைரவா் ஆலயத்திற்குச்  சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன்  நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது  தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று(21) காலை குறித்த பகுதிக்கு  கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள்  ஆகியோh் நில அளவை செய்வதற்கு சென்ற போது ஒன்று  திண்ட பொது மக்கள்  நில அளவை செய்ய  விடாது தடுத்து  நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

குறித்த காணியானது கிளிநொச்சி நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க  காணியாகும்.  இக் காணியானது தங்களது காணி என தனிநபர் ஒருவா்  உரிமை கோரி வருகின்றாh்.  அவருக்கு காணியினை வழங்கும் நோக்குடன் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் நில அளவீடு செய்ய முற்பட்ட போது  எங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று மூன்றாவது தடவையாகும் நில அளவீடு செய்ய சமூகம் தந்துள்ளனா். இதனை எங்களால்  அனுமதிக்க முடியாது என பிரதேச பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

அத்தோடு  வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தக் காணிக்குரிய ஆவணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்தல் வழங்கிய போதும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனா்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More