Home இந்தியா ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது:-

ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது:-

by admin

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய மருத்துவ அறிக்கைகளை தமிழக அரசு விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது தம்பி ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த சூழல் மற்றும் நிலைமை குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு விசாரணை ஆணைய நியமன உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தமிழக அரசிடம் வழங்கிய மருத்துவ அறிக்கைகளை ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி அறிவுறுத்தியிருந்தார்

இந்தவகையில் இதுவரை விசாரணை ஆணையத்தில் 27 பிரமாண பத்திரங்களும், 110 மனுக்களும் பெறப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீதிபதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையில் வரும் 24ம் திகதியுடன் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஆணையம் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு 3 மாதங்கள் அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More