இலங்கை பிரதான செய்திகள்

மாதகல் கடற்பரப்பில் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்கள் கைது


யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்ததாக தெரிவித்து கடற்படையினர் காங்கேசந்துறை காவல்துறையினரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (22) சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று கைது செய்ததாக கடற்படையினர் கூறினர்.

இவ்வாறு கைதாகிய நபர்கள் வசம் இருந்த சுமார் 150 கிலோவிற்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் மாதகல் பகுதியை சேர்ந்தவர்களாவர். மேலும் கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா குறித்து காங்கேசந்துறை காவல்துறையினர்; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.