Home இலங்கை சகல விடயதானங்களும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் – சூட்சுமமாக கூறிய மகிந்த :

சகல விடயதானங்களும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் – சூட்சுமமாக கூறிய மகிந்த :

by admin

மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் நிலவிவந்தன. இந்த நிலையில் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக நடைபெற்ற கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென அவர் கூறியுள்ளார். அதாவது பதவிநிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, அவற்றின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்கால அரசியலையும் வெளிப்படுத்துகின்றது.

மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மைத்திரி அமைச்சுப் பொறுப்பை வகித்திருந்தார். இப்போது ஜனாதிபதியாக மைத்திரி செயற்படும் நிலையில், மஹிந்த பிரதமராக உள்ளார். இந்த பதவிநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளனவே தவிர, செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லையென மஹிந்த குறிப்பிடுவதானது, சகல விடயதானங்களும் தமது கட்டுப்பாட்டில் இருக்குமென்பதையே சுட்டிக்காட்டுகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More