அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ருவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
உம்ரா கடமைகளுக்காக சென்ற போது மக்காவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ருவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment