Home இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு…

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே தங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்தே அவர்கள் மேற்படி முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரி எம். றோகித பிரியதர்சனவிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டினைக் கையளித்துள்ளனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More