இலங்கை பிரதான செய்திகள்

மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தாவிடில் அதனை தவறவிடுவோம்

“மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லாவிடில் அவற்றை தவறவிட்டு விடுவோம்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.2018 ஆம் ஆண்டுக்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மக்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், மக்களது தேவைகளை இனங்கண்டு வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கினால் மட்டுமே அந்த திட்டங்கள் வெற்றியளிக்கக் கூடியதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வினைத்திறனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதன் மூலம் தான், மாவட்டத்தின் நோக்கங்களையும் அடைய முடியும் எனத் தெரிவித்த அவர் அரசின் கொள்கைகளை செயற்படுத்தும் வகையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மக்களின் வாழ்வாதார தேவைகளையும் வாழ்வியல்களையும் உயர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில், இந்த ஆண்டு அமைய வேண்டும் எனவும் எமது திட்டங்களை உரிய நேரத்தில் செயற்படுத்த தவறுவோமாயின் அந்த செயற்பாடுகளை தவறவிட்டவர்கள் ஆவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் நிலைபேறான பொருளாதாரத்தினை அடையும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக நிலையான அபிவிருத்தியும், நிலைபேறான விவசாய அபிவிருத்தியும்’எனும் தொனிப்பொருளில், செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே 2018 ஆம் ஆண்டில் தரிசு நிலங்களை இணங்கண்டும், ஏற்கனவே, செய்கையிடப்படுகின்ற நிலங்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய செயற்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த இலக்கினை அடைவதற்கு அனைவரும்; ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.